கோவைசெப்டம்பர் 5 கோவை ஒண்டிப்புதூர், கம்போடியா மில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரி.இவரது மனைவி சரஸ்வதி (வயது 40) இவர் நேற்று உக்கடம் பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண் இவரது பையில் இருந்த 600ரூபாயை நைசாக திருடினார். இதை பார்த்த சரஸ்வதி சத்தம் போட்டார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை மடக்கி பிடித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரைகைது செய்தனர் . விசாரணையில்அந்தப் பெண் கேரள மாநிலம் திருச்சூரைசேர்ந்த குமார் மகள் பவித்ரா ( வயது 19 )என்பது தெரியவந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0