கோவை கோவை செப்டம்பர் 30 கோவை பீளமேடு சிவில் விமான நிலையம், பூங்கா நகரை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி சரஸ்வதி ( வயது 34) இவர் பீளமேடு விமான நிலையத்தில் உள்ள ஒரு ஸ்வீட்ஸ் கடையில் விற்பனையாளராக கடந்த 9 ஆண்டுகளுக்கு வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி ( வயது 16) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் .மகன் கனி கண்ணன் (வயது 12) ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் .அதே ஸ்வீட்ஸ் கடையில் விற்பனையாளர்களாக தஞ்சாவூரை சேர்ந்த லோகேஷ் ,சரவணன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் சக ஊழியர்களிடம்அடிக்கடி கடன் வாங்கி வந்தார்களாம் .இந்த நிலையில் லோகேஷ் சரவணன் ஆகியோர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.இதே நபர்கள் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் கூறி சரஸ்வதியிடமும் பணம் கடன் வாங்கி இருந்தார்களாம்.இந்த பணத்தை திருப்பி கேட்ட ஆத்திரத்தில் லோகேஷ் ,சரவணன் ஆகியோர் சரஸ்வதியின் வீட்டில் புகுந்து அங்கிருந்த அவரது மகள் மகாலட்சுமியை ஸ்குரு டிரைவரால் குத்தினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.. இதுகுறித்து அவரது தாயார் சரஸ்வதி பீளமேடு போலீசில் புகார் செய்தார்.. போலீசார்வழக்கு பதிவு செய்து லோகேஷ் சரவணன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





