காதணி விழாவுக்கு வந்த முதியவர் மண்டபத்தில் தவறி விழுந்து சாவு

கோவை அக்டோபர் 14 வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, முதல் வீதியைச் சேர்ந்தவர் ராமநாதன் ( வயது 65)இவரது மனைவி திருவேணி ( வயது 53) இவரின் உறவினர் பேத்திக்கு கோவை சுண்டக்காமுத்தூரில் காதணி விழா நடந்தது. இதில் கலந்துகொள்ள ராமானுஜமும், திருவேணியும் கோவைக்கு வந்தனர். விழா மண்டபத்தின் மேடையில் நடந்து சென்றபோது ராமநாதன் திடீரென்று கால் தடுமாறி கீழே விழுந்தார் .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைஅளித்தும் பலனளிக்காமல் இராமநாதன் இறந்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.காதணி விழாவில் தவறி விழுந்து முதியவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.