கோவை செப்டம்பர் 13 கோவை கவுண்டம்பாளையம் சங்கனூர் ரோட்டில் உள்ள கருப்பசாமி நகரை சேர்ந்தவர் கோபிநாத் .டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கமாக கார் ஓட்ட சென்று விட்டு 15 நாட்கள் கழித்து தான் வீட்டுக்கு வருவார். இந்த நிலையில் அவரது மனைவி பிரியதர்ஷினி நடத்தையில் கோபிநாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆத்திரமடைந்த கோபிநாத் கத்தியால் மனைவி பிரியதர்ஷினியை குத்தினார் இதில் அவருக்குபலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்துமனைவி பிரியதர்ஷினி கவுண்டம்பாளையம் போலீசில்புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் வழக்கு பதிவு செய்து கணவர் கோபிநாத்தை தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0