இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய கிராமங்களுக்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜி.சந்தீஷ் நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு “உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி” என்ற புதிய திட்டத்தினை ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கடுகுசந்தை சத்திரம் கிராமத்தின் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் பொதுமக்களை நேரடியாக சந்தித்து சட்டம் ஒழுங்கு தொடர்பான சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் பொதுமக்களின் குறைகளை குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு மற்றும் கல்லூரி மேற்படிப்பிற்கு தேவையான உதவிகள் செய்வதாகவும், இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வாள் போன்ற ஆயுதங்களுடன் புகைப்படங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதேபோன்று சிசிடிவி கேமரா வைப்பதன் அவசியம் பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளையும் தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்ல உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் தெரிவித்துள்ளார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0