கோவை உக்கடம் , புல்லுக்காடு, ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 24) இவர் நேற்று அந்த பகுதியில் தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த . 6 பேர் முன் விரோதம் காரணமாக ரஞ்சித் குமாரை தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரஞ்சித் குமார் படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் வழக்கு பதிவு செய்து புல்லுக்காடு ,ஹவுசிங் யூனிட்டைசேர்ந்த அசைனார் மனைவி தவுலத் நிஷா ( வயது 47 )மகன் அசாருதீன் (வயது 30) அப்துல் கலாம் (வயது 20) சல்மான் கான் ( வயது 21 )ராஜ்குமார் (வயது 22 )தவ்பிக் ( வயது 25) ஆகியோரை கைது செய்தார். 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








